குழந்தை இயேசு நவநாள் செபம்

தொடக்கச் செபம்:

எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே! அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும். நீரே எங்கள் ஆண்டவர். நீரே எங்கள் மீட்பர். எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமைமிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம். தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே. - ஆமென்.

குழந்தை இயேசு புகழ்மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்

வானகத் தந்தையாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகை மீட்ட, மகனாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்

அற்புதக் குழந்தையாகிய இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே… -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.

கருணை கூர்ந்து. . . எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே,

கருணை கூர்ந்து. . . எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலிருந்து . . . எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.

எல்லாப் பாவத்திலிமிருந்து,எங்களை மீட்டருளும் இயேசுவே.

 அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து

எங்களை மீட்டருளும் இயேசுவே.

அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லா சந்தேகத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து - எங்களை மீட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து - எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூய சூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்.

அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று - உம்மை மன்றாடுகிறோம்.

உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்

பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்

உமது அற்புத திருச்சுரூபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்

இறைமகனே, மரிமகனே, - இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே,

செபிப்போமாக:

அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த . . . (உறுதியோடு கேட்கும்) வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக - ஆமென்.

நன்றி மன்றாட்டு:

கனிவு நிறைந்த குழந்தை இயேசுவே ' என் மேல் நீர் பொழிந்தருளிய ' எல்லா நன்மைகளுக்காகவும் ' முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன் ' உமது இரக்கத்தை நான் என்றும் போற்றிப் புகழ்வேன்' நீர் ஒருவரே என் இறைவன் ' என் துணைவன் என்று பறைசாற்றுவேன். ' என் நம்பிக்கை எல்லாம் இனி உமது கையிலே தான் ' உமது இரக்கத்தையும்' வல்லன்மையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். ' உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக ' குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் அதிகமதிகமாகப் பரவுவதாக' உமது உதவியை பெற்று மகிழும் அனைவரும் ' உமது குழந்தைப் பருவத்திற்கு ' என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக; ' என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக.

அர்ப்பண மன்றாட்டு:

இனிய குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் பேருண்மைகளை வியந்து, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை அன்புசெய்கிறேன்; உம்மை மகிமைப் படுத்துகிறேன்; என் மீது கொண்ட அன்பால் எனக்காக நீர் ஒரு சிறு குழந்தையாக பிறந்தீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த அன்புக்குப் பதில் அன்பாக என்னை முழுவதும் உமக்குக் கையளித்து காணிக்கை ஆக்குகிறேன். இப்பொழுதும், என் வாழ்நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மை இறைஞ்சிக் கேட்கிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், பிறப்பையும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும். உம்மை அன்பு செய்யவும், உம்மை பின்பற்றி நடக்கவும், வானகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்குத் துணை நிற்பதாக. - ஆமென்.

துன்பவேளை மன்றாட்டு:

இனிய இயேசுவே! மக்களிடையே வாழ்வதும், அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர். உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும், கோரிக்கைகளையும், ஏக்கங்களையும். . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும்)

உம்மிடம் கேட்கிறேன். உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன். இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து, மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க வேண்டும் என்று குழந்தை இயேசுவே உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்.

வல்லமையுள்ள செபம்:

இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்" என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறுவர்களுக்கு உமது அரசைத் தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. - ஆமென்